வசதிகள்

உடல்நலப் பாதுகாப்பு மையங்கள் (சிறப்பு மற்றும் தனிச் சிறப்பு மருத்துவமனைகள்) – அரசு, தனியார் நிறுவனங்கள்:

கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பத்தனம்திட்டை பொது மருத்துவமனை, பம்பை இருதயப் பரிசோதனை மையங்கள், நீலிமலை, அப்பாச்சிமேடு, சன்னிதானம் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்கள் போன்ற இடங்களிலிருந்து பக்தர்கள் மருத்துவ உதவி பெறலாம்.

 

இருதயப் பரிசோதனை மையங்களும் தொடர்பு எண்ணும்

  • அப்பாச்சிமேடு:  04735-202050
  • நீலிமலை:  04735-203384

பம்பை

  • அரசு மருத்துவமனை:  04735-203318
  • அரசு ஹோமியோ மருத்துவமனை:  04735-203537
  • அரசு ஆயுர்வேத மருத்துவமனை:  04735-202536
  • சஹஸ் மருத்துவமனை:  04735-203350

சன்னிதானம்

  • அரசு மருத்துவமனை:  04735-202101
  • அரசு ஹோமியோ மருத்துவமனை:  04735-202843
  • அரசு ஆயுர்வேத மருத்துவமனை:  04735-202102
  • சஹஸ் மருத்துவமனை:  04735-202080
  • என்.எஸ்.எஸ். மருத்துவமனை:  04735-202010

 

பம்பை:
404 சுத்தநீர்க் குழாய்களும் மருத்துவ குணம்வாய்ந்த சுக்குநீர் வழங்கும் மூன்று மையங்களும் உள்ளன.

சன்னிதானம்:
306 சுத்தநீர்க் குழாய்களும் சுக்குநீர் வழங்கும் 40 மையங்களும் உள்ளன.

நிலைக்கல்:
1200 சுத்தநீர்க் குழாய்களும் சுக்குநீர் வழங்கும் 8 மையங்களும் உள்ளன.

சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா அன்னதான டிரஸ்ட்

உலகப் புகழ் வாய்ந்த சபரிமலை ஸ்ரீதர்மசாஸ்தா கோயில், மேற்குத் தொடர்ச்சி மலையில், பெரியார் வனவிலங்கு சரணாலயத்தின் தெற்குப் பகுதியில் அடர்ந்த காட்டுக்குள் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சபரிமலையில் கோயில் கொண்டிருக்கும் சுவாமி ஐயப்பனை ‘அன்னதான பிரபு’ என்றே பக்தர்கள் அழைப்பர். எனவே ஐயப்ப தர்மத்தின்படி இங்கு தரிசனம் செய்ய வருகின்ற அனைத்துப் பக்தர்களுக்கும் அன்னதானம் செய்யப்படுகின்றது.

சபரிமலையிலும் பம்பையிலும் மட்டுமன்றி, இடைத்தாவளங்களிலும் பக்தர்களுக்கு உணவு வழங்க, சபரிமலை ஆட்சிக்குழுவாகிய திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு எல்லா ஏற்பாடுகளும் செய்துள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதருவதால் அன்னதானத்திற்குப் பெருந்தொகை தேவைப்படும்.  எனவே தேவஸ்வம் போர்டு ‘சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா அன்னதான டிரஸ்ட்’ என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளது. சபரிமலைக்கும் பிற கோயில்களுக்கும் வருகைதரும் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்குவதே இவ்வமைப்பின் முக்கிய நோக்கம்.

அன்னதானம் வழங்குவதற்காக மாளிகைப்புறம் கோயிலின் பின்புறத்தில் அன்னதான மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய மண்டபங்களுள் ஒன்று. நாள் முழுவதும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களுக்கு இலவச உணவு வழங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் வசதிகளையும் போர்டு செய்துள்ளது.

நன்கொடை வழங்குவதற்கான முகவரி:
தலைமை அலுவலர்
சபரிமலை தேவஸ்வம்
பத்தனம்திட்டை மாவட்டம்
கேரளம்
தொலைபேசி: 04735-202028
Phone: 04735-202028

அல்லது
The Devaswom Accounts Officer,
Travancore Devaswom Board Building,
Nanthancode, Thiruvananthapuram
(Phone: 0471-2315837) Fax:0471-2315834
Email:devaswomaccountsofficer@gmail.com

என்ற முகவரியிலும் அனுப்பலாம்.

நன்கொடை வழங்குவோர் ‘சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா அன்னதான டிரஸ்ட்’ (Sabarimala Sree Dharma Sastha Annadhana Trust) பெயரில் l’கிராஸ்’ செய்த காசோலை அல்லது ’டிமாண்ட் டிராஃப்ட்’ மூலம் பணம் செலுத்தலாம்.

நன்கொடை தொகைக்கு 80G (5) (vi) பிரிவின் படி வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Account Numbers for RTGS/NEFT
Dhanalaxmi Bank
Nanthancode, Thiruvananthapuram
Account No: 012601200000086  IFS Code: DLXB0000275

HDFC Bank, Sasthamangalam, Thiruvananthapuram
Account No: 15991110000014, IFS Code: HDFC0001599

Online Donation through www.sabarimala.tdb.org.in

Net Bank facility
    www.dhanbank.com (Dhanalaxmi Bank)
    www.hdfcbanks.com (HDFC Bank)

நன்கொடை வழங்குவோருக்கான தனிச் சலுகைகள்:

ஐம்பது லட்சம் ரூபாய்: (Rupees Fifty lakhs)
ஒருநாள் மூன்று வேளை என்ற நிலையில் பத்து ஆண்டுகள் நன்கொடையாளரின் பெயரில் அன்னதானம் வழங்கப்படும்.

ஓராண்டில் ஐந்து நாட்கள் இலவசமாகத் தங்கும் வசதி செய்துதரப்படும் (மண்டல பூஜை, மகரவிளக்கு விழாவுக்கு முன்னதாக நான்கு நாட்கள் தவிர).

வசதியான தரிசனத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

இரண்டு டின் அரவணையும் (250 மில்லி வீதம்), இரண்டு பாக்கெட் அப்பமும் பதினைந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வழங்கப்படும்.

இருபத்தைந்து லட்சம் ரூபாய்: (Rupees Twentyfive lakhs)

ஒருநாள் மூன்று வேளை என்ற நிலையில் நான்கு ஆண்டுகள் நன்கொடையாளரின் பெயரில் அன்னதானம் வழங்கப்படும்

ஓராண்டில் மூன்று நாட்கள் இலவசமாகத் தங்கும் வசதி செய்துதரப்படும் (மண்டல பூஜை, மகரவிளக்கு விழாவுக்கு முன்னதாக நான்கு நாட்கள் தவிர).

வசதியான தரிசனத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

இரண்டு டின் அரவணையும் (250 மில்லி வீதம்), இரண்டு பாக்கெட் அப்பமும் பத்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வழங்கப்படும்.

இருபது லட்சம் ரூபாய்: (Rupees Twenty Lakh)

ஒருநாள் மூன்று வேளை என்ற நிலையில் மூன்று ஆண்டுகள் நன்கொடையாளரின் பெயரில் அன்னதானம் வழங்கப்படும்

ஓராண்டில் இரண்டு நாட்கள் இலவசமாகத் தங்கும் வசதி செய்துதரப்படும் (மண்டல பூஜை, மகரவிளக்கு விழாவுக்கு முன்னதாக நான்கு நாட்கள் தவிர). பத்து ஆண்டுகளுக்கு.

வசதியான தரிசனத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

இரண்டு டின் அரவணையும் (250 மில்லி வீதம்), இரண்டு பாக்கெட் அப்பமும் பத்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வழங்கப்படும்.

பதினைந்து லட்சம் ரூபாய்: (Rupees Fifteen lakh)

ஒருநாள் இரண்டு வேளை என்ற நிலையில் இரண்டு ஆண்டுகள் நன்கொடையாளரின் பெயரில் அன்னதானம் வழங்கப்படும்

ஓராண்டில் மூன்று நாட்கள் இலவசமாகத் தங்கும் வசதி செய்துதரப்படும் (மண்டல பூஜை, மகரவிளக்கு விழாவுக்கு முன்னதாக நான்கு நாட்கள் தவிர). ஐந்து  ஆண்டுகளுக்கு.

வசதியான தரிசனத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

இரண்டு டின் அரவணையும் (250 மில்லி வீதம்), இரண்டு பாக்கெட் அப்பமும் பத்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வழங்கப்படும்.

பத்து லட்சம் ரூபாய்:  (Rupees Ten lakh)

ஒருநாள் இரண்டு வேளை என்ற நிலையில் இரண்டு ஆண்டுகள் நன்கொடையாளரின் பெயரில் அன்னதானம் வழங்கப்படும்

ஓராண்டில் இரண்டு நாட்கள் இலவசமாகத் தங்கும் வசதி செய்துதரப்படும் (மண்டல பூஜை, மகரவிளக்கு விழாவுக்கு முன்னதாக நான்கு நாட்கள் தவிர). ஐந்து  ஆண்டுகளுக்கு.

வசதியான தரிசனத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

இரண்டு டின் அரவணையும் (250 மில்லி வீதம்), இரண்டு பாக்கெட் அப்பமும் பத்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வழங்கப்படும்.

ஐந்து லட்சம் ரூபாய்: (Rupees Five lakh)

ஒருநாள் இரண்டு வேளை என்ற நிலையில் நன்கொடையாளரின் பெயரில் அன்னதானம் வழங்கப்படும்

ஓராண்டில் ஒருநாள் இலவசமாகத் தங்கும் வசதி செய்துதரப்படும் (மண்டல பூஜை, மகரவிளக்கு விழாவுக்கு முன்னதாக நான்கு நாட்கள் தவிர). இரண்டு ஆண்டுகளுக்கு.

வசதியான தரிசனத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

இரண்டு டின் அரவணையும் (250 மில்லி வீதம்), இரண்டு பாக்கெட் அப்பமும் பத்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வழங்கப்படும்.

மூன்று லட்சம் ரூபாய்: (Rupees Three lakh)

ஒருநாள் ஒரு வேளை என்ற நிலையில் நன்கொடையாளரின் பெயரில் அன்னதானம் வழங்கப்படும்

ஓராண்டில் ஒருநாள் இலவசமாகத் தங்கும் வசதி செய்துதரப்படும் (மண்டல பூஜை, மகரவிளக்கு விழாவுக்கு முன்னதாக நான்கு நாட்கள் தவிர). ஓராண்டுக்கு

வசதியான தரிசனத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

இரண்டு டின் அரவணையும் (250 மில்லி வீதம்), இரண்டு பாக்கெட் அப்பமும் பத்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வழங்கப்படும்.

ரூபாய் நூறின் மடங்கு என்ற நிலையில் ஒரு பக்தருக்கு எவ்வளவு பணம்வேண்டுமானாலும் அனுப்பலாம். நிர்வாகம், கம்பனி அல்லது குழுவின் பெயரில் நன்கொடை வழங்குவோர் அவர்கள் குறிப்பிடும் ஒரு நபருக்கு சலுகைகள் அளிக்கப்படும். தனியாக நன்கொடை வழங்குவோரும் அவர்கள் விரும்பினால் இன்னொருவரின் பெயரைப் பரிந்துரை செய்யலாம்.

அன்னதான நன்கொடை யாருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம். எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை.
சுவாமி ஐயப்பனின் அருள் எல்லோருக்கும் உண்டாகட்டும்.

சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா அன்னதான டிரஸ்ட்
தேவஸ்வம் கமிஷனர் அண்ட் டிரஸ்ட்டி
தேவஸ்வம் கமிஷனர் அலுவலகம்
நந்தன்கோடு
திருவனந்தபுரம்- 695 003

தொலைபேசி: 0471-2315156, 2314288
பேக்ஸ்: 0471-2315156
மின்னஞ்சல்: sabarimala.aanadhanam@gmail.com

 

பம்பை
மொத்தம் 346 கழிப்பறைகள்
60 பெண்கள் கழிப்பறைகள்
60 பயோ கழிப்பறைகள்
40 பயோ சிறுநீர்க் கழிப்பிடங்கள்
பம்பை சபரிமலை வழியில் 10 பயோ கழிப்பறைகள், 36 பயோ சிறுநீர்க் கழிப்பிடங்கள்

நிலைக்கல்
மொத்தம் 1090 கழிப்பறைகள்
60 குளியலறைகள், 120 சிறுநீர்க் கழிப்பிடங்கள்

சன்னிதானம்
மொத்தம் 1161 கழிப்பறைகள்
160 குளியலறைகள்
150 சிறுநீர்க் கழிப்பிடங்கள்

 

பம்பை
அன்னதான மண்டபம், பம்பை

நிலைக்கல்
அன்னதான மண்டபம், நிலைக்கல்

சன்னிதானம்
அன்னதான மண்டபம், சன்னிதானம். காலை, மதியம், இரவு உணவு இங்குக் கிடைக்கும்.

 

கீழ்வரும் அட்டவணையில் குறிப்பிட்டிருப்பதுபோல் பல தரத்திலுள்ள அறைகள் வாடகைக்குக் கிடைக்கும்.

அறை வகை

வாடகை
(12 மணி நேரம்)

வாடகை
(16 மணி நேரம்)

மொத்தம்
அறைகள்

தரம் ஏ

  250

  350

  138

தரம் பி

  400

  600

  71

தரம் சி

  450

  650

  276

தரம் டி

  500

  700

  2

தரம் இ

  650

  850

  64

தரம் எஃப்

  750

  1050

  2

தரம் ஜி

  850

  1150

  4

தரம் எச்

  975

  1375

  2

தரம் ஐ

  1125

  1525

  1

தரம் ஜெ

  1200

  1600

  4

தரம் கே

  1600

  2200

  1

பிரசாதங்கள் விநியோகம் செய்வதற்காக சன்னிதானத்தில் தனி மையங்கள் உள்ளன.

 

9000 வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியான 16 நிறுத்தல் இடங்கள் உள்ளன.
மேலும் 2000 வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மிக விரைவில் இத்திட்டம் முழுமைபெறும்.

 

சபரிமலை மண்டல-மகரவிளக்கு புனிதப் பயணத்தை ஒட்டி பத்தனம்திட்டை மாவட்டத்தில் 25 இடைத்தாவளங்கள் (வழியே தங்கும் இடங்கள்) அமைக்கப்பட்டுள்ளன. இவை நாள்தோறும் 24 மணி நேரமும் செயல்படும். பெண் காவலர்களின் உதவியும் இடைத்தாவளங்களில் கிடைக்கும். இரவு நேரப் போலீஸ் கண்காணிப்பும் உண்டு. படுக்கை, உணவு, குடிநீர், கழிப்பறை வசதிகள் முதலான எல்லா ஏற்பாடுகளும் இடைத்தாவளங்களில் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட இடைத்தாவளங்கள்

  • அடூர் ஏழம்குளம் தேவி கோயில்
  • பந்தளம் வலியகோயிக்கல் ஸ்ரீதர்ம சாஸ்தா கோயில்
  • கோந்நி கோரிங்கமங்கலம் கோயில்
  • கொடுமண் தோலுழம் சந்திப்பு
  • பத்தனம்திட்டை இடைத்தாவளம்
  • ஓமல்லூர் ஸ்ரீரக்தகண்ட சுவாமி கோயில்
  • மலையாலப்புழை தேவி கோயில்
  • ஆறன்முளை பார்த்தசாரதி கோயில்
  • ஏலந்தூர் பஞ்சாயத்து ஸ்டேடியம்
  • கோழஞ்சேரி பஞ்சாயத்து ஸ்டேடியம்
  • அயிரூர் கோயில்
  • தெள்ளியூர்
  • திருவல்லா முனிசிப்பல் ஸ்டேடியம்
  • மீந்தலக்கரை சாஸ்தா கோயில்
  • ராந்நி இடைத்தாவளம், பழவங்காடி
  • கூனங்கரை சபரி சரணாஸ்ரமம்
  • பெருநாடு இடைத்தாவளம்
  • பெருநாடு யோகமாயந்த ஆஸ்ரமம்
  • வடசேரிக்கரை செறியகாவு தேவி கோயில்
  • வடசேரிக்கரை பிரயார் மகாவிஷ்ணு கோயில்
  • பெருநாடு காக்காடு கோயிக்கல் தர்மசாஸ்தா கோயில்
  • பெருநாடு மாடமண் ரிஷிகேச கோயில்
  • குளநடை ஸ்ரீகிருஷ்ணசுவாமி கோயில்
  • குளநடை பஞ்சாயத்து இடைத்தாவளங்கள்

பாதுகாப்பு மண்டலத் திட்டங்களும் பாதுகாப்பான புனிதப் பயணமும்

     சபரிமலைக்குச் செல்லும் சாலைப் பயணத்தில் பகதர்களின் பாதுகாப்பிற்காகக் கேரள சாலை பாதுகாப்புத் துறையும் கேரள மோட்டோர் வாகனத் துறையும் இணைந்து மேற்கொண்டுள்ள திட்டமே பாதுகாப்பு மண்டலத் திட்டம். 400 கிலோமீட்டர் சுற்றளவில் பயணம் செய்யும் பக்தர்களுக்கு இத் திட்டத்தின் சேவைகளைப் பெறலாம். மண்டல- மகரவிளக்குக் காலம் நிரைவுபெறும் வரையிலும் இத் திட்டம் செயல்படும். பக்தர்கள் எவ்வித இடையூறுகளுக்கும் ஆளாகாமல் பாதுகாப்பாக சபரிமலைப் பயணமும் தரிசனமும் நடத்தவேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

     குருசுவாமிகளிடம் அல்லது வாகன ஓட்டுநர்களிடம் ஆறு மொழிகளிலமைந்த எச்சரிக்கை மற்ரும் வழிகாட்டுப் பிரசுரங்கள் வழங்கப்படுகின்றன. சுங்கச்சாவடிகள், டோல் மையங்கள், இடைத்தாவளங்கள் போன்ற இடங்களில் இப் பிரசுரங்கள் வழங்கப்படும். மேலும் பேருந்து நிலையங்கள், ரயில்நிலையங்கள் போன்ற பல இடங்களிலும் ஆங்கிலம், தமிழ், மலையாலம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் போலீஸ் அறிவிப்புகளும் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. பாதுகாப்பு மண்டலத்தின் முக்கிய அலுவலகமான எலவுங்கல் அலுவலகம் மட்டுமன்றி எருமேலி, குட்டிக்கானம் ஆகிய துணை அலுவலகங்களும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் எலவுங்கல், எருமேலி, குட்டிக்கானம் ஆகிய பகுதிகளில் 24 பாதுகாப்புக் குழுக்கள் விழிப்போடு செயல்பட்டுவருகின்றன. சபரிமலை புனிதப் பயணக் காலத்தில் சிறியதும் பெரியதுமாக சுமார் ஒரு கோடி வாகனங்கள் சபரிமலைக்கு வரலாம் என் எதிர்பார்க்கப்படுகின்றது. இக் காலத்தில் நாங்கு லட்சம் கிலோமீட்டர் சுற்றளவில் போலீஸ் வாகனப் பாதுகாப்பு இருக்கும். இப்பகுதிகளில் சிறப்பான ‘ஆம்புலன்ஸ்’ சேவையும் உண்டு. விபத்துகளோ உடல்நலக் குறைவோ ஏற்பட்டால் பக்தர்கலைக் காப்பாற்ற எல்லா மருத்துவ உதவிகளும் கிடைக்கும். போக்குவரத்துத் தடைகள் ஏற்பட்டால் உடனடி சீரமைப்பதற்கான் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாகனங்கள் பழுதுபட்டால் இலவசமாக சரிசெய்வதற்கான வசதிகளும் உள்ளன. 40 டன் பாரமுள்ள வாகனங்கள் வரை இவ்வாறு பழுது பார்க்கலாம்.  எலவுங்கல்லில் இதற்கான ஒரு ‘மொபைல்’ பழுதுபார்க்கும் யூனிட் தயார்நிலையில் உள்ளது.


பாதுகாப்பு மண்டலம்: அவசரத் தேவைக்கான எண்கள்

     மண்டல-மகரவிளக்குக் காலங்களில் சபரிமலைச் செல்லும் பயணிகளுக்காகப் பாதுகாப்பு மண்டலத் திட்டம் திறம்படச் செயல்படுகிறது. பக்தர்கள் இதன் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.  வாகன விபத்து முதலான அவசரத் தேவைகளுக்குக் கீழ்க்காணும் தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

எலவுங்கல் – 09400044991, 09562318181
எருமேலி – 09496367974, 08547639173
குட்டிக்கானம் – 09446037100, 08547639176

மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.
safezonesabarimala@gmail.com